தற்போதைய செய்திகள்

காட்பாடி பொன்னையாற்று ரயில்வே பாலத்தில் விரிசல்: 23 ரயில்கள் ரத்து

DIN

வேலூர் காட்பாடி அருகே பொன்னையாற்றின் பாலத்தில் விரிசல் ஏற்பட்ட காரணத்தால் 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பொன்னையாற்றின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் விரிசல் உள்ளதை நேற்று ரயில்வே துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பொன்னையாற்று பாலத்தில் ரயில்களை இயக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

ரயில்கள் ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பாதிப்படைந்துள்ளனர். பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள ரயில்வே துறை பயணிகளின் ரயில் கட்டணங்கள் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும் விரிசல் ஏற்பட்டுள்ள பாலத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

SCROLL FOR NEXT