கனமழை எச்சரிக்கை: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், புதுக்கோட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு நாளை (நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், புதுக்கோட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு நாளை (நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரம் - வட தமிழக கடற்கரை நோக்கி நகரவுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.