முகப்பு
தற்போதைய செய்திகள்

போலந்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட அரிய வகை சிலந்திகள் பறிமுதல்

போலந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலைச் சேர்ந்த சிலந்தி வகையின் 10 சிலந்திகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

போலந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலைச் சேர்ந்த சிலந்தி வகையின் 10 சிலந்திகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

போலந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட பார்சல் ஒன்றின் மீது சந்தேகமடைந்த விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அதனை சோதனையிட்டனர். 

அப்போது அந்த பார்சலில் பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலந்தி வகையைச் சேர்ந்த 10 சிலந்திகள் இருந்தது தெரியவந்தது. 

இந்நிலையில் அந்தப் பார்சலை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பார்சலில் இடம்பெற்றுள்ள முகவரி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments