துணிகளுக்கு இஸ்திரி போட்டு வாக்கு சேகரித்த சட்டமன்ற உறுப்பினர்!
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் அம்மன் அர்சுணன் துணிகளுக்கு இஸ்திரி போட்டு மக்களிடையே வாக்கு சேகரித்தார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பல்வேறு இடங்களில் வேட்பாளர்களும், வேட்பாளர்களை ஆதரித்து கட்சியினர், கட்சித் தலைவர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் எனத் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை அதிமுக வேட்பாளரான சிங்கை ராமசந்திரனை ஆதரித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
அதன் ஒரு பகுதியாக புலியகுளம் பகுதியில் வாக்கு சேகரித்த கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் அம்மன் அர்சுணன், சாலையோர இஸ்திரி கடையில் துணிகளுக்கு இஸ்திரி போட்டு அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுக்கு வாக்கு சேகரித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.