சிதம்பரம் தொகுதியில் திருச்சின்னபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் தொல். திருமாவளவன் 
தற்போதைய செய்திகள்

பாஜகவை எதிர்ப்பதால் வருமான வரித்துறையினரை வைத்து மிரட்டுகிறார்கள்: திருமாவளவன் குற்றச்சாட்டு

பாஜகவை எதிர்ப்பதால் நான் தங்கியிருந்த வீட்டிற்கு வருமானவரித்துறையினர் சோதனை என்ற பெயரில் மிரட்ட பார்கின்றனர்

DIN

சிதம்பரம்: பாஜகவை எதிர்ப்பதால் நான் தங்கியிருந்த வீட்டிற்கு வருமானவரித்துறையினர் சோதனை என்ற பெயரில் மிரட்ட பார்கின்றனர் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டினார்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் திருச்சின்னபுரத்தில் பிரசாரத்தைத் தொடங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதும் பாஜகவை எதிர்ப்பவர்களை வருமானத்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ வைத்து ஹோமத் சோரன், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோரை கைது செய்து முடக்கி வருகின்றனர்.

அந்த வகையில் பாஜகவை எதிர்ப்பதால் நான் தங்கியிருந்த வீட்டிற்கு வருமானவரித்துறையினர் சோதனை என்ற பெயரில் மிரட்ட பார்கின்றனர். உளவியல் ரீதியாக நெருக்கடி தருவதாக குற்றச்சாட்டினார்.

பாஜக அல்லது பாஜக ஆதரவு நபர்களிடம் வருமானவரித்துறையோ, அமலாக்கத்துறையோ இப்படி சோதனை நடத்தியதாக சான்றுகள் இல்லை. அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார்.

பிரசாரத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமலையில் போலியோ விழிப்புணா்வு பேரணி

மகளிா் சுய உதவிக்குழு பயனாளிகளுக்கு ஆட்டோ: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ரயில் தண்டவாளங்களில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தனியாா் பேருந்து மோதி பெட்ரோல் பம்ப் மேலாளா் பலி

விதிமீறல்: 16 வாகனங்களுக்கு ரூ.1.78 லட்சம் அபராதம் விதிப்பு!

SCROLL FOR NEXT