முகப்பு
தற்போதைய செய்திகள்

தெலங்கானாவில் காவல் உதவி ஆய்வாளர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

தெலங்கானாவில் காவல் உதவி ஆய்வாளர் திங்கள்கிழமை காலை தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 2 டிசம்பர் 2024, 2:52 pm IST
கோப்புப்படம்.
பகிர்:

தெலங்கானாவில் காவல் உதவி ஆய்வாளர் திங்கள்கிழமை காலை தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், வசேது காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் எதுநகரம் மண்டலத்தில் உள்ள ரிசார்ட் அறையின் படுக்கையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

மத்திய நிதியமைச்சருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு!

நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement

அதில் அவர் தனது சர்வீஸ் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

தனிப்பட்ட காரணங்களால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.