திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்படும் காட்சி (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

பக்தர்கள் மலையேற அனுமதி மறுப்பு ஏன்? - திருவண்ணாமலை ஆட்சியர்

தீபம் ஏற்றும்போது பக்தர்களுக்கு மலையேற அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக...

DIN

மகா தீபம் ஏற்றும்போது பக்தர்களுக்கு மலையேற அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி:

திருவண்ணாமலை தீபத் திருவிழாவின்போது ஏற்றப்படும் மகா தீபத்திற்கு வழக்கமாக 2,500 பேர் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் பென்ஜால் புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவால் 7 பேர் பலியானார்கள்.

இதனால், தீபத்திருவிழாவன்று பக்தர்கள் மலையேறுவதால் ஏற்படும் அபாயங்களை ஆய்வு செய்வதற்காகவும், மலையின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காகவும் தொல்லியல் மற்றும் சுரங்கத்துறையினர் கொண்ட குழு ஆய்வு செய்தது.

அவர்கள் அளித்த அறிக்கையில், மலையின் மேற்பகுதியில் ஈரப்பதம் இருப்பதாகவும், பாறைகள் உருளும் அபாயம் இருப்பதாகவும், மண்சரிவு ஏற்படும் வாய்ப்பிருப்பதாகவும், இதனால் பக்தர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலும் மலையேறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு சிறப்பு அனுமதி சீட்டு இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌ எனவும், பக்தர்கள் மலை மீது ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னதாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நட்பினால் நஷ்டமா? மோடி - டிரம்ப் உறவு குறித்த கணிப்பு உண்மையானது!

வருமான வரிக் கணக்கு தாக்கல்: கால அவகாசம் நீட்டிக்கப்படலாம்! காரணம் இதுதான்!!

கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா நிதானம்!

ஒப்பனையில் சாரா யஸ்மின்!

முதல்வர் ஸ்டாலின் வீட்டில் ஓபிஎஸ்! திமுகவுடன் கூட்டணியா? பரபரக்கும் அரசியல் களம்!

SCROLL FOR NEXT