FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நீர் திறப்பு காலம் நீட்டிப்பு!

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 14 டிசம்பர் 2024, 8:32 am IST
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,198 கன அடியாக குறைந்துள்ளது.
பகிர்:

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு காலம் சனிக்கிழமை(டிச.14) முதல் மேலும் 33 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அணை நீர்மட்டம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 6,384 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,198 கன அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 117.31 அடியிலிருந்து 117.57 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 89.64 டிஎம்சியாக உள்ளது.

மழையளவு 13.2 மி.மீ பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments