முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நீர் திறப்பு காலம் நீட்டிப்பு!

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 14 டிசம்பர் 2024, 8:32 am IST
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,198 கன அடியாக குறைந்துள்ளது.
பகிர்:

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு காலம் சனிக்கிழமை(டிச.14) முதல் மேலும் 33 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அணை நீர்மட்டம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 6,384 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,198 கன அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 117.31 அடியிலிருந்து 117.57 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 89.64 டிஎம்சியாக உள்ளது.

மழையளவு 13.2 மி.மீ பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.