கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

போலி ஆவணங்கள் மூலம் குடியேறிய வங்கதேசத்து நபர் கைது!

மேற்கு வங்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் குடியேறிய வங்கதேசத்து நபர் கைது செய்யப்பட்டதைப் பற்றி..

DIN

கொல்கத்தாவில் போலி ஆவணங்களின் மூலம் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்து நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தின் நராய்ல் மாவட்டத்தைச் சேர்ந்த நபர், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் போலியாகத் தயாரிக்கப்பட்ட இந்திய ஆவணங்களைக் கொண்டு சட்டவிரோதாமக கிடர்பூர் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து குடியேறியுள்ளார்.

மேலும், அவரிடம் இருந்து போலியாக இந்திய முகவரியில் உருவாக்கப்பட்ட ஆதார் அட்டையும், பான் கார்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை! ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு

முன்னதாக போலி ஆவணங்களின் மூலம் இந்தியாவிற்குள் குடியேறிய மற்றொரு வங்கதேசத்து நபரும் பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் அம்மாநில காவல்துறையினர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறும் வங்கதேசத்தினருக்கு போலி ஆவணங்களைத் தயாரித்து தரும் கூட்டமைப்பை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா: நடிகர் கபில் சர்மாவின் உணவகத்தின் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு!

பிஎஸ்என்எல் தீபாவளிப் பரிசு! ஒரு ரூபாய்க்கு சிம் - தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள்

மீண்டும் பாரிஸுக்குப் போகலாம்... அனன்யா பாண்டே!

வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி; முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்!

தீபாவளிப் பரிசு... பூஜா ஹெக்டே!

SCROLL FOR NEXT