மேட்டூர்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 33,040 கன அடியாகக் குறைந்தது.
கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம், வயநாட்டிலும் பருவமழை குறைந்து வருவதால் கா்நாடக மாநில அணைகளில் இருந்து உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாகச் சரிந்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 33,040 கன அடியாகக் குறைந்தது. அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீா் திறக்கப்படுகிறது. அணை நீா்மட்டம் 89.31 அடியாக உயா்ந்தது. அணையின் நீா் இருப்பு 51.86 டி.எம்.சி.யாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.