தமிழிசை சௌந்தரராஜன் 
தற்போதைய செய்திகள்

திமுக, காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றும் பலனில்லை: தமிழிசை

எந்த பலனுமில்லாமல் திமுக, காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பது கவலையாக உள்ளது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

DIN

சென்னை: எந்த பலனுமில்லாமல் திமுக, காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பது கவலையாக உள்ளது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையித்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக அதிகமான வாக்குகள் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்பதை எல்லா தொண்டர்களையும் போலவே கவலையாகவே பார்க்கிறேன் என தெரிவித்தார்.

மேலும் எங்களுக்கு ஒரு தொகுதியும் கிடைக்கவில்லை என்பதை விட, எந்த பலனும் இல்லாமல் திமுக, காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பது கவலை அளிக்கிறது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிரணியில் இருந்துகொண்டு தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டியதை கிடைக்கவிடாமல் செய்கிறார். ஸ்டாலின் எப்போதுமே இதுபோன்ற தவறைதான் செய்வார் என தமிழிசை கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

முதல் டி20: இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா பந்துவீச்சு! அணி விவரம்...

18 மணி நேரம் பாடல் கேட்கலாம்... ஸெப்ரானிக்ஸ் புளுடூத் ஸ்பீக்கர்!

தற்கொலை செய்துகொண்ட மருத்துவரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும்: ராகுல்

பிரதமர் மோடி ஒரு கொலைகாரர் - டிரம்ப் விமர்சனம்!

SCROLL FOR NEXT