காணொளியில் பகிரப்பட்டவை 
தற்போதைய செய்திகள்

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

கான்பூரில் நீட் தேர்வுக்குப் படிக்க வந்த பதின்வயது மாணவரை சீனியர் மாணவர்கள் நிர்வாணப்படுத்தி கடுமையாகத் தாக்கியதால் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

DIN

உத்தரபிரதேசம், கான்பூரில் நீட் தேர்வுக்குப் பயிற்சி வகுப்பில் இணைந்து படிக்க எட்டாவா பகுதியில் இருந்து ஒரு மாணவர் வந்துள்ளார். அவருக்கு அங்கு இருந்த சீனியர் மாணவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் ஜூனியர் மாணவருக்கு ரூ.20,000 பணம் கொடுத்து ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடச் சொல்லியுள்ளனர்.

அந்த மாணவர் சூதாட்டத்தில் பணத்தைத் தோற்றவுடன், அதனை ரூ.2 லட்சமாக திருப்பித் தருமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர். மாணவர் பணத்தைத் தர முடியாமல் போகவே அவரைத் தனியறையில் வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

மேலும் அந்த மாணவரை உதைத்தும், அடித்தும், ஆணுறுப்பில் தாக்கியும், அதனை காணொளியாக பதிவு செய்தும் வைத்துள்ளனர். அதில் ஒரு காணொளியில் அந்த மாணவரின் தலையில் தீப்பற்ற வைத்தும், நிர்வாணப்படுத்தி ஆணுறுப்பில் செங்கலைக் கட்டி வைத்தும் கொடுமை செய்துள்ளனர்.

இந்தக் கொடுமைகள் தொடர்ந்து நடக்கவே அந்த மாணவர் தனது பெற்றோரிடம் இதனை தெரிவித்துள்ளார். அவர்கள் எட்டவா காவல்துறையில் புகாரளித்ததும் காவல்துறையினர் அந்த மாணவர்களை கண்டித்து அனுப்பியுள்ளனர்.

பின்னர், எட்டாவா மாணவன் தாக்கப்படும் காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆனவுடன், மே 4 அன்று கான்பூர் காவல்துறையினர் தாமாக முன்வந்து 6 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 147,34,343,323,500,506 மற்றும் 307 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை துணை ஆணையர் ஆர்.எஸ்.கௌதம் தெரிவித்துள்ளார். மேலும் போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவுச் சட்டம் 67(பி) பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த மாணவர்கள் கும்பலாக ஒரு குடியிருப்பில் தங்கி, அங்கு வரும் மாணவர்களை அவர்கள் வலையில் விழ வைத்து ஏமாற்றி வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடிகால் மாஸ்டா் பிளான் திட்டத்திற்கான நிதியுதவிக்கு உலக வங்கியை நாடும் தில்லி அரசு

3.2.1976: சென்னை கோட்டையில் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை

காங்கயத்தில் ரூ.73 ஆயிரத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

வெறுப்பைக் கைவிடுங்கள்; இணைந்து செயல்படுவோம்: காங்கிரஸுக்கு பாஜக அழைப்பு

சொத்து வரி மன்னிப்புத் திட்டம் பிப்.28 வரை நீட்டிப்பு: எம்சிடி

SCROLL FOR NEXT