கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

ஆக. 15-க்குள் 30 லட்சம் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு தொடங்கப்படும்: ராகுல் காந்தி

ஆக 15-க்குள் 30 லட்சம் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு தொடங்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

DIN

அரசுத் துறைகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு பணியை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தொடங்க திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள விடியோவில் தெரிவித்திருப்பதாவது:

"நாட்டின் இளைஞர்களே! ஜூன் 4 ஆம் தேதி நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்படும், ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு பணிகளைத் தொடங்குவோம் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.

பதவி கைவிட்டுப் போகும் பயத்தில் பிரதமர் மோடி பலவிதமான நாடகங்களை நடத்தி வருகிறார், ஆனால் அவரது முயற்சிகள் வெற்றியடையாது.

நீங்கள் நரேந்திர மோடியின் பொய்ப் பிரசாரங்கள் மீது கவனம் செலுத்தாமல், உங்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துங்கள்.

இந்தியா சொல்வதைக் கேளுங்கள், வெறுக்காதீர்கள், ஒரு வேலையைத் தேர்ந்தெடுங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்க வேண்டும்: கேஜரிவால்

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

SCROLL FOR NEXT