முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை: நிபுணர் குழு கூட்டம் திடீர் ரத்து!
முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக இன்று(மே 28) நடைபெறவிருந்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழு கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக இன்று(மே 28) நடைபெறவிருந்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழு கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டும் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகத்திடம் கேரள அரசு கடந்த ஜனவரி மாதம் சுற்றுச்சூழல் நிறுவன ஆய்வறிக்கையை சமா்ப்பித்து மனு அளித்தது.
இந்த மனுவை ஆய்வு செய்ய அமைச்சகம், கடந்த மே 14-ஆம் தேதி மத்திய அரசின் நிபுணா் மதிப்பீட்டுக் குழுவுக்கு அனுப்பியது. இந்த மனு மீதான நிபுணா் மதிப்பீட்டுக் குழு ஆலோசனைக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை (மே 28) நடைபெற இருந்தது.
Advertisement
Advertisement
கேரள அரசின் புதிய அணை கட்டும் திட்டம் தொடர்பான மனு மீதான ஆலோசனை இன்று நடைபெற இருந்த நிலையில், கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள லோயா்கேம்ப்பில் முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டும் கேரள அரசின் திட்டத்தைக் கண்டித்து, விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.