காட்பாடி ரயில் நிலைய சந்திப்பில் ரயிலில் இருந்து தவறி விழுந்த உயிரிழன்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார்.  
தற்போதைய செய்திகள்

ரயிலில் இருந்து தவறி விழுந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பலி: ரயில்வே போலீசார் விசாரணை

காட்பாடி ரயில் நிலைய சந்திப்பில் ரயிலில் இருந்து தவறி விழுந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

DIN

வேலூர்: காட்பாடி ரயில் நிலைய சந்திப்பில் ரயிலில் இருந்து தவறி விழுந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து காட்பாடி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அண்ணா நகர் குற்றப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் செந்தில்குமார் (55). இவர் திருப்பூரில் இருந்து சென்னைக்கு ரயிலில் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலைய சந்திப்பில் நின்று புறப்பட்ட மங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் பயணிகள் விரைவு ரயிலில் நடைமேடைக்கு எதிர் திசையில் இருந்து ஏற முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது ரயில் புறப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்த செந்தில்குமார் ரயில் சக்கரத்தில் சிக்கி தனது இரண்டு கால்களை இழந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து அவரது உடல் உடல்கூறாய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT