2026-ல் தனித்துப் போட்டி: சீமான்
2026 சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து சீமான்.
வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போடியிடும் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
அடுத்தவர் கால்களை நம்பி பயணத்தை தொடரமாட்டேன். என் பயணம் என் கால்களை நம்பிதான். நான் தமிழ்மகன், என் தேசம் தமிழ்தேசம், என் அரசியல் தமிழ்தேச அரசியல். நான் அதில்பாதி, இதில்பாதி கிடையாது.
என்னைத்தான் எல்லாரும் பின்பற்றுகிறார்கள், என் செய்வதேயே அனைவரும் செய்கிறார்கள். என்னுடைய கொள்கை யாருடன் ஒத்துப்போகாது.
நிலத்தை நாசமாகக்கும் நச்சு ஆலைகளை திணித்தது இந்தியக் கட்சிகள், அதை அனமதித்தது திராவிடக் கட்சிகள். திராவிடக் கட்சிகள் போட்டியிட்டு ஊழல் செய்கின்றனர் என்று தெரிவித்தார்.