தற்போதைய செய்திகள்

வங்கக்கடலில் உருவானது ஃபென்ஜால் புயல்!

தென்மேற்கு வங்கக்கடலில் ஃபென்ஜால் புயல் உருவாகியுள்ளது.

DIN

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபென்ஜால் புயலாக உருவாகியுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டிருந்த புயல் சின்னம், இன்று(நவ. 29) பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று (28-11-2024) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஃபென்ஜால் புயலாக வலுப்பெற்றுள்ளது.

ஃபென்ஜால் புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக - புதுவை கடற்கரையை காரைக்காலுக்கும் - மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே 30-ஆம் தேதி பிற்பகல் புயலாக கடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று(நவ. 29) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,

ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாதுகாப்பான குடிநீா் விநியோகிக்கக் கோரி முற்றுகைப் போராட்டம்

பங்குச்சந்தை முதலீடு எனக்கூறி ரூ.28.90 லட்சம் மோசடி

சேலம் நுண்ணறிவு பிரிவில் எஸ்.ஐக்கள், தலைமை காவலா்கள் இடமாற்றம்

பழங்குடியினா் வசிக்கும் கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

புதுச்சேரியில் அமுதசுரபி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT