மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,929 கன அடியாக குறைந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை தனிந்ததன் காரணமாக, நேற்று(அக். 19) காலை வினாடிக்கு 18,384 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில், நீர்வரத்து இன்று(அக். 20) காலை வினாடிக்கு 15,929 கன அடியாக குறைந்துள்ளது.
இதையும் படிக்க: கவரப்பேட்டை ரயில் விபத்து: மேலும் ஒரு பிரிவில் வழக்கு!
Advertisement
Advertisement
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடியிலிருந்து வினாடிக்கு 3000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 95.88 அடியிலிருந்து 96.90அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 60.89 டிஎம்சியாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.