தீபாவளி: எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து பேருந்துகள்!
தீபாவளி பண்டிகையையொட்டி பேருந்துகள் இயக்கம் குறித்த தகவல்.
தீபாவளி பண்டிகையையொட்டி எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேட்டில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரி, திருச்சி, மதுரை, நெல்லை, திருவண்ணாமலை, தஞ்சை செல்வோருக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.
Advertisement
Advertisement
கோயம்பேட்டில் இருந்து காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தனிக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாதவரத்தில் இருந்து ஆந்திரம், சேலம், கும்பகோணம், திருச்சிக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஒரு வாரத்தில் 90 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம், மாதவரம் செல்ல வசதியாக 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் பல்வேறு ஊர்களுக்கும் வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 3 நாள்களுக்கு 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.