தற்போதைய செய்திகள்

ஹேமந்த் சோரன் வேட்புமனு தாக்கல்!

வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஹேமந்த் சோரன்.

DIN

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. நவம்பர் 13 ஆம் தேதியும், நவம்பர் 20 ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில், அக்கட்சியின் தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் பர்ஹைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

மேலும், புதன்கிழமை காலை வெளியிட்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில், ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், சகோதரர் பசந்த் சோரன் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT