யாருக்கும் இந்தியா அடிபணியாது! டிரம்ப்புக்கு பியூஷ் கோயல் மறைமுகத் தாக்கு!
இந்தியா யாருக்கும் ஒருபோதும் அடிபணியாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருப்பதைப் பற்றி...
யாருக்கும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பொருளாதார மிரட்டலுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்களுக்கு முதலில் 25 சதவிகித வரியும், அதன்பின்னர் கூடுதலாக 25 சதவிகித வரியும் விதித்தார்.
உலகளாவிய வர்த்தக பதற்றத்துக்கு மத்தியில், புது தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “யாருக்கும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது” எனத் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், “இந்தியா கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக ஏற்றுமதிகளைச் செய்யும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்தியாவை "செத்துப்போன பொருளாதாரம்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். அதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். இந்திய பொருளாதாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கிண்டல் செய்வது வெட்கக் கேடான விஷயம். அதற்காக நான் அவரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
வெளிப்படையாகச் சொல்லப் போனால், இந்தியாவின் பொருளாதாரம் பற்றி பேசிய ராகுல் காந்தியை இந்த நாடு ஒருபோதும் மன்னிக்காது.
நாட்டின் பணம், அந்நிய செலாவணியின் இருப்பு, பங்குச் சந்தைகள் அனைத்தும் வலுவான நிலையிலேயே உள்ளன. பிற வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் பணவீக்கம் உலகிலேயே மிகக் குறைவாகத்தான் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
India will not bow to anybody, says Piyush Goyal amid trade wars
இதையும் படிக்க : ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.