கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

மாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு தொடர்பாக...

DIN

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(பிப். 12) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை காலம் கடந்த நவம்பா் 16-ஆம் தேதி தொடங்கியது. 41 நாள்கள் யாத்திரை காலத்தின் நிறைவாக, கடந்த டிசம்பா் 26-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது.

அப்போது, சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, கோயில் நடை சாத்தப்பட்டது.

பின்னா், மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பா் 30-ஆம் தேதி கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை கடந்த ஜனவரி 14-ஆம் தேதி மாலையில் நடைபெற்றது.

இதையும் படிக்க: புதிய ஆளுநர் கையெழுத்துடன் ரூ.50 தாள்கள்! ஆர்பிஐ தகவல்!

வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை காலம் நிறைவடைந்து, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஜன. 20-ல் அடைக்கப்பட்டது.

இந்த நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(பிப். 12) மாலை 5 மணிக்கு மேல்சாந்தி அருண்குமாா் நம்பூதிரி, திறக்கப்பட்டது.

இன்று வேறு பூஜைகள் நடைபெறாது எனவும் நாளை(பிப். 13) அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, கணபதி ஹேமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளும், இரவில் படி பூஜையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக இன்று திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 5 நாள்கள் அதாவது பிப். 17 ஆம் தேதி வரை திறந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் தலைவன் தலைவி: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

உத்தரகண்ட்: பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்

ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு!

காலை இரவு உணவைத் தவிர்த்தல் சரியா? டயட் முறைகள் உடலுக்கு நல்லதா? தவறான நம்பிக்கைகளும் உண்மையும்...

SCROLL FOR NEXT