முகப்பு
தற்போதைய செய்திகள்

திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்!

திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக...

Updated On : 13 பிப்ரவரி 2025, 5:17 pm IST
கோப்புப்படம் - Center-Center-Chennai
பகிர்:

புதிதாக மாவட்ட பொறுப்பாளர்களை நியமனம் செய்து திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

திமுகவின் நிர்வாக வசதிக்காகவும் கட்சிப் பணிகள் நடைபெறவும் ஈரோடு, திருப்பூர் விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதோடு சில மாவட்டங்களுக்கு புதிதாக பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.

Advertisement

Advertisement

திமுகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக ரமேஷ் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுகவின் நெல்லை மத்திய மாவட்ட புதிய பொறுப்பாளராக அப்துல் வகாப் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்ட புதிய பொறுப்பாளராக கே,எம். ராஜு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக க. செல்வராஜும் திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக இல. பத்மநாபனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுகவின் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளராக தோப்பு வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.