543 மக்களவைத் தொகுதிகளிலும் கடவுச்சீட்டு சேவை மையம்!
543 மக்களவைத் தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைப் பற்றி...
இந்தியாவின் 543 மக்களவைத் தொகுதிகளிலும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சேவை மையம் அமைக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா அறிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் குணா மாவட்டத்தில் நேற்று (ஜன.11) கடவுச்சீட்டு சோவை மையத்தை திறந்து வைத்தப்பின் பேசிய அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் 543 மக்களவைத் தொகுதிகளிலும் கடவுச்சீட்டு சேவை மையம் திறக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை இந்திய அஞ்சல் துறை, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியோடு செயல்படுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: விவேகானந்தரின் கனவை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம்: பிரதமர் மோடி
இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் சுமார் 6,000 தபால் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவின் பாரம்பரியப் பழக்கமான கடிதம் எழுதுவதை மக்கள் மீண்டும் பின்பற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார். தற்போது, இந்தியாவிலுள்ள தபால் நிலையங்களில் பல்வேறு தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா மத்தியப் பிரதேசத்தின் குணா தொகுதியில்தான் போட்டியிட்டு வென்றார். அப்பகுதி மக்கள் கடவுச்சீட்டு சேவைக்காக தொலைவிலுள்ள போப்பால், குவாலியர் ஆகிய நகரங்களுக்கு பயணம் செய்யவேண்டி இருந்த சூழலில் தற்போது திறக்கப்பட்டிருக்கும் கடவுச்சீட்டு சேவை மையம் அம்மக்களின் பிரச்சனையைத் தீர்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டு (2025) மத்தியப் பிரதேசத்தில் 6 புதிய கடவுச்சீட்டு சேவை மையங்கள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.