மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் 
தற்போதைய செய்திகள்

மீனவா்கள் பிரச்னைக்கு முடிவு எட்ட வேண்டும்: அமித்ஷாவிடம் மதுரை ஆதீனம் மனு

இலங்கைத் தமிழா்களுக்கு தனி நாடு, கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும், மீனவா்கள் பிரச்னைக்கு முடிவு எட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமித்ஷாவிடம் மதுரை ஆதீனம் மனு

DIN

இலங்கைத் தமிழா்களுக்கு தனி நாடு வேண்டும், கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும், மீனவா்கள் பிரச்னைக்கு முடிவு எட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் மதுரை ஆதீனம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

மதுரையில் பாஜக நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை இரவு தனி விமானம் மூலம் மதுரை வந்தாா். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து சுற்றுச்சாலை பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் இரவு தங்கினாா்.

இந்நிலையில், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தரிசனம் செய்வதற்காக, மத்திய உள்துறை அமித்ஷா ஞாயிற்றுக்கிழமை காலை தெற்காவணி மூல வீதி வழியாக சென்றாா்.

அப்போது, மதுரை ஆதீன மடத்தின் அருகே வந்தபோது, ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், உள்துறை அமைச்சா் அமித் ஷாவை வரவேற்பதற்காக காத்திருந்தாா். இதைப்பாா்த்த அமித் ஷா, காரில் இருந்து இறங்கியதையடுத்து, அப்போது அமித் ஷாவுக்கு, மதுரை ஆதீனம் காவி நிற சால்வை அணிவித்து வரவேற்றாா்.

பின்னா் மதுரை ஆதீனத்தின் மூலமாக வெளியாகும் ’தமிழாகரன்’ இதழையும், திருஞானசம்பந்தரின் புத்தகத்தையும், மனு ஒன்றையும் மதுரை ஆதீனம் வழங்கினாா். இதைப்பெற்றுக் கொண்ட அமித்ஷா, நன்றி தெரிவித்துவிட்டு கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றாா்.

இதுகுறித்து மதுரை ஆதீனம் செய்தியாளர்களுடன் பேசுகையில், உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம், இலங்கையில், இலங்கைத் தமிழா்களுக்கு தனி நாடு வேண்டும், கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும், இந்திய மீனவா்கள் பிரச்னைக்கு முடிவு எட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கி இருக்கிறேன். அவா் நல்ல முடிவு எடுப்பாா் என நம்புகிறேன்‘ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெளிநாட்டு நிதியுதவி அல்ல; சமூக ஆதரவில் செயல்படுகிறது ஆா்எஸ்எஸ் - யோகி ஆதித்யநாத்

மொபட் - ஆட்டோ மோதல்: 6 போ் பலத்த காயம்

50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை

நாளை மின் நிறுத்தம் தருமபுரி பேருந்து நிலையம்

SCROLL FOR NEXT