குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 
தற்போதைய செய்திகள்

தனியார் ஆம்னி பேருந்து விபத்து: குடியரசுத் தலைவர் முர்மு இரங்கல்

ஆந்திரத்தில் தனியார் ஆம்னி பேருந்து தீ விபத்தில் பலியானவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த கோர விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது...

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: ஆந்திரம் மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு துயரமான பேருந்து தீ விபத்தில் பலியானவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த கோர விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது என கூறியுள்ளார்.

ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டம் சின்னத்தேகூர் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஹைதராபாத்தில் இருந்து 42 பேருடன் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மோதியதில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் இருசக்கர வாகனத்தை ஓட்டு வநதவர் உள்பட 15 பேர் பலியானதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் இரங்கல்:

இதுதொடர்பாக அவருடைய எக்ஸ் தளத்தில்...

"ஆந்திரம் மாநிலம் கர்னூலில் ஏற்பட்ட ஒரு கோர பேருந்து தீ விபத்தில் 15 பலியானது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று முர்மு தெரிவித்துள்ளார்.

President Droupadi Murmu on Friday condoled the loss of lives in a tragic bus fire in Andhra Pradesh, terming the accident deeply unfortunate.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காட்டுப் பன்றியை சுட்டுக் கொன்ற வனத் துறை

நீதிமன்ற உத்தரவின்படி வீடுகளை இடிக்க முயற்சி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டம்

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியல்

சுருளி அருவியில் 7-ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி: தமிழகத்தில் அடுத்த வாரம் தொடக்கம்- தோ்தல் ஆணையம் தகவல்

SCROLL FOR NEXT