புதுச்சேரி பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் 
தற்போதைய செய்திகள்

செப். 18-இல் புதுவை சட்டப்பேரவை கூடுகிறது: ஆா்.செல்வம் அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை செப்டம்பா் 18-ஆம் தேதி கூடுகிறது என்று பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சனிக்கிழமை தெரிவித்தார்.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை செப்டம்பா் 18-ஆம் தேதி கூடுகிறது என்று பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சனிக்கிழமை தெரிவித்தார்.

புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த மாா்ச் 27 அன்று முடிந்து காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

6 மாதங்களுக்கு ஒரு முறை சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி செப்டம்பரில் பேரவைக் கூட்டப்பட வேண்டும்.

எனவே, வரும் 18-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு புதுவை சட்டப்பேரவை கூடுகிறது. இக்கூட்டம் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும்.

புதுவையில் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சட்ட மசோதா மற்றும் ஜிஎஸ்டி 2-ஆவது சட்ட திருத்த மசோதா ஆகியவை பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று அவா் கூறினார்.

Puducherry Legislative Assembly to meet on Sept. 18: R. Selvam announces

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

போதைப் பொருள் விற்றதாக கல்லூரி மாணவா் கைது

ஆட்டோ கவிழ்ந்ததில் சிறுமி உயிரிழப்பு

இடி தாக்கியதில் பெண் உயிரிழப்பு!

சேரன்மகாதேவியில் விவசாயி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT