தஞ்சாவூரில் மன்னா் சரபோஜி பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம்.  
தற்போதைய செய்திகள்

மன்னா் சரபோஜி பிறந்த நாள் விழா: அரசு சார்பில் ஆட்சியர் மரியாதை

மன்னர் சரபோஜியின் 248 ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திச் சேவை

மன்னர் சரபோஜியின் 248 ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தஞ்சாவூரை சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் என பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்க மன்னர்களில் ஒருவரான 2 ஆம் சரபோஜியின் 248 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி, தஞ்சாவூர் அரண்மனை வளாக தர்பார் மண்டபத்தில் உள்ள மன்னர் சரபோஜியின் முழு உருவ பளிங்கு சிலைக்கு அரசு சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இவ்விழாவில் சரஸ்வதி மகால் நூலக ஊழியர்கள் கலந்து கொண்டு சரபோஜி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

King Serfojis II birthday celebration Collector pays homage on behalf of the government

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிக்ஸர் சூரியவன்ஷி..! ஆஸி.யில் உலக சாதனை படைத்த 14 வயது சிறுவன்!

புதிய அவதாரம்... மடோனா!

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் தாக்குதல்! பெட்டிகள் தடம் புரண்டதில் 12 பேர் படுகாயம்!

உக்ரைனின் பக்கமே இந்தியா! - அமெரிக்காவிடமிருந்து முரண்படும் ஸெலென்ஸ்கி

ஜாய் கிரிஸில்டா விவகாரம்: மாதம்பட்டி ரங்கராஜுக்கு காவல் துறை சம்மன்!

SCROLL FOR NEXT