எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் வைத்திலிங்கம்!
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தது தொடர்பாக...
முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை புதன்கிழமை (ஜன. 21) ராஜிநாமா செய்தார்.
சமீபத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரான ஆலங்குளம் தொகுதி மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்த நிலையில், வைத்திலிங்கம் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் பிரிந்துள்ள நிலையில், கட்சி ஒருங்கிணைப்பு குறித்து பேசியதால் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நீக்கியிருந்தார்.
Advertisement
Advertisement
இதனால், அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், கடந்த நவ. 26 ஆம் தேதி கோபிசெட்டிப்பாளையத்தின் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இவரைத் தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளரான ஜே.டி.சி. பிரபாகர் தவெகவில் இணைந்தார்.
வைத்திலிங்கம் ராஜிநாமா
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது ஒரத்த நாடு தொகுதி பேரவை உறுப்பினர் பதவியை புதன்கிழமை (ஜன. 21) ராஜிநாமா செய்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.
எம்.எல்.ஏ. பதவியை வைத்திலிங்கம் ராஜிநாமா செய்துள்ளதால், இனி அவர் எந்தக் கட்சியிலும் இணையலாம். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, பதவியில் இருக்கும்போது வேறு ஒரு கட்சியில் இணையக்கூடாது என்பதால், வைத்திலிங்கம் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் திமுகவில் புதன்கிழமை (ஜன.21) இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Vaithilingam resigned from his ADMK MLA post
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.