முகப்பு
தற்போதைய செய்திகள்

மமதா தனது அரசாங்கத்தில் ஜனநாயகத்தைக் கண்டறிய வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ.

மமதா பானர்ஜி தன்னுடைய அரசாங்கத்தில் ஜனநாயகத்தைக் கண்டறிய வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. கூறியது குறித்து...

Updated On : 10 மார்ச், 2026 at 9:57 AM
பாஜக எம்.எல்.ஏ பாவணா போக்ரா
பகிர்:

மமதா பானர்ஜி தன்னுடைய அரசாங்கத்தில் ஜனநாயகத்தைக் கண்டறிய வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. பாவனா போக்ரா கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முடிவு பெற்று இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த பிப். 28 ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.

அந்தப் பட்டியலில் உயிரோடுள்ள வாக்காளர்கள் இறந்தவர்களாகக் குறிக்கப்பட்டுள்ளதென மமதா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த நடைமுறையை எதிர்த்து கொல்கத்தாவின் முக்கிய நகரமான தர்மதலாவில் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) முதல் போராட்டம் நடத்தி வருகிறார்.

இப்போராட்டத்தில் பாஜகவினர் அவர்களின் கட்சி சார்ந்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி வருவதாகவும் அவர்களைக் கண்டறிந்து காவல்துறையினரிடம் ஒப்படைக்கும்படியும் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இது குறித்து, செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) பாஜக எம்.எல்.ஏ. பாவனா போக்ரா கூறுகையில் "மமதா பானர்ஜி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மீது குறை சொல்வதற்கு முன், முதலில் மேற்கு வங்க அரசாங்கத்தில் ஜனநாயகத்தைக் கண்டறிய வேண்டும். குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு மேற்கு வங்கத்துக்குச் சென்றார்.

ஒரு பெண்ணாகவும், மேற்கு வங்க முதல்வராகவும் அவர் நெறிமுறைகளின்படி நடந்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவின் திட்டத்தை அழிப்பது மட்டுமே மமதாவின் நோக்கமாக இருந்தது” எனத் தெரிவித்திருக்கிறார்.

summary

Mamata should find democracy in her government: BJP MLA

முழு கட்டுரையைப் படிக்க →