ஸ்பெஷல்

வேலை தேடுவோர் கவனதிற்கு! இந்த 5 காரணங்களினால்தான் நீங்கள் நிராகரிக்கப்படுகிறீர்கள்!

எல்லா நாட்டின் முக்கிய பிரச்னை வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது. அரசு தனியார்

சினேகா

எல்லா நாட்டின் முக்கிய பிரச்னை வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது. அரசு தனியார் என எந்த வேலையாக இருந்தாலும் அதற்கு தகுதியுடையவராக முதலில் நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

நிறுவனங்கள் முதலில் தங்களுக்குத் தேவையான பதவிகளையும், அதற்கேற்ற திறமைகளையும் பட்டியலிட்டுத்தான் ஆட்கள் தேவை என விளம்பரப்படுத்துகின்றன. அதை நன்றாகப் படித்த பின்னர்தான் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

குத்துமதிப்பாக போட்டுத்தான் பார்ப்போமே என்று நீங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை இதில் முயலக் கூடாது. அப்படிச் செய்தால் அது உங்களின் நேரத்தை மட்டுமல்ல அந்நிறுவனத்தின் அதிகாரிகளின் நேரத்தையும் வீணடிக்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே விண்ணப்பிக்கும் போதே இந்த வேலைக்கு எல்லா வகையிலும் நான் பொருத்தமானவனாக இருப்பேனா என்று நீங்கள் யோசித்த பின்னர் தான் அனுப்ப வேண்டும். 

நேர்முகத் தேர்வுக்குச் சென்றுவந்த பின் ஏன் இந்த வேலை எனக்குக் கிடைக்கவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இவை எல்லாம் காரணமாக இருக்கலாம்.

அனுபவக் குறைவு

நான்கு ஆண்டுகள் கட்டாயம் அனுபவம் தேவை என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தால் ஓராண்டு அல்லது இரண்டு மட்டுமே உள்ள நீங்கள் அதற்கு விண்ணப்பிக்கக் கூடாது. நிச்சயம் நிராகரிக்கப்படுவோம் என்று தெரிந்தே ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? ஒரு வேளை...என்று நீங்கள் நினைத்து செயல்படுவதற்கு இது விளையாட்டல்ல. Professional Ethics என்று கூறப்படும் சிலவற்றை நாம் கற்றுக் கொள்வது ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும் போதிலிருந்து தொடங்குகிறது. 

படிப்பு

எம்பிஏ படித்தவர்கள் தேவை என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில் இன்ஜினியரிங் முடித்த நீங்கள் விண்ணப்பிக்கக் கூடாது. பட்டதாரிகள் எனப் பொதுவாக குறிப்பிட்டிருந்தால் நீங்கள் முயற்சி செய்யலாம். மேலும் அதிகமான படிப்பு உங்களுக்கு இருந்து, நீங்கள் உங்கள் தகுதிக்கு குறைவான இடங்களிலும் நிராகரிக்கப்படுவீர்கள். நிறுவனங்களிடம் இவ்விஷயங்களை முன்னரே  நிர்ணயிப்பதில் தெளிவு செய்து கொள்ள முடியாத நிலை இருப்பதால் அந்த விண்ணப்பத்தை ஆழமாகப் படித்து அதில் குறிப்பிடப்பட்டவை உங்கள் ரெஸ்யூமியுடன் பொருந்தவில்லை எனில் அனுப்பாமல் இருப்பதே மேல். சில சமயம் ஓர் அவசரத்தில் உங்களை வேலைக்கான நேர்காணலுக்கு அழைத்துவிட்டாலும், அங்கு சென்ற பின் அவர்கள் நிராகரித்துவிடலாம்.  

அதிக தொடர்புகள் இல்லாதது

இந்தக் காலத்தில் மட்டுமல்ல எந்தக் காலத்திலும் வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும். எனவே உங்கள் தகவல் தொடர்பு ஆற்றலை அதிகரித்துக் கொள்ளுங்கள். நேர்காணலில் கேட்ட கேள்விக்கு ஏனோ தானோவென்று பதில் சொல்லக் கூடாது. சேல்ஸ் மார்கெட்டிங் போன்ற வேலைகளுக்குச் சேர விண்ணப்பித்திருந்தால் உங்களுடைய ஆளுமைத் திறன், எத்தனை நபர்கள் உங்கள் வட்டத்தில் உள்ளனர் போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனக்கு யாரையும் தெரியாது என்று நீங்கள் சொல்லியிருந்தால் உங்களை யாரென்றே தெரியாது என அவர்கள் நிராகரித்துவிடுவார்கள். 

திறமைகள் வேறு

உங்களுக்குத் அந்த வேலைக்கான தகுதி மற்றும் திறமை இருந்தால் அது நிச்சயம் கிடைத்துவிடும். ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன்பு அது குறித்து ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து முடிவெடுங்கள். பல வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. வேலை வேண்டுவோரும் நிறைய பேர் உள்ளனர். இவை இரண்டு மேட்ச் ஆகவேண்டும். இவை பொருந்தாதபட்சத்தில் நீங்கள் நிராகரிக்கப்படலாம். 

பொருத்தமற்ற வேலை

சில நேரங்களில், வேலை அல்லது நிறுவனம் உங்களுக்குப் பொருத்தமாக இல்லாமல் போகலாம். உங்களுடைய எதிர்ப்பார்ப்புகளை அந்த நிறுவனம் பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம். வருத்தப்படாமல் அடுத்த வேலைக்கான முயற்சியை தொடங்குங்கள். 

நீங்கள் நினைத்த வேலை கிடைக்கவில்லை என்று தேங்கிவிடாதீர்கள். முயற்சி செய்து கொண்டேயிருந்தால் நிச்சயம் அதைவிட சிறந்த வேலை கிடைக்கும். திறமைகள் ஒருபோதும் தோற்றுப் போகாது. உங்களை நீங்கள் இழக்காத வரையிலும் நீங்கள் எதையும் இழப்பதில்லை. நம்புங்கள். வெற்றியாளராக இருக்க ஒரு இப்போது இருப்பதைவிட ஒரு செண்டிமீட்டர் அதிகமாக புன்னகைக்க கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கையும் சரி வேலையும் சரி சுலபம்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT