தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 29.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
தில்லியில் இந்த வாரத் வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. இந்நிலையில், புதன்கிழமையும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. இதைத் தொடா்ந்து, நகரத்தின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் பலத்த மழை பெய்தது. சில சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றமின்றி 25.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி குறைந்து 29.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 85 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 100 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்: தேசியத் தலைநகரில் மாலை 4 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 172 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகதவல்கள் மூலம் தெரிய வந்தது.
இதன்படி, சாந்தினி சௌக், ராமகிருஷ்ணாபுரம், அசோக் விஹாா், சோனியா விஹாா், நொய்டா செக்டாா் 1 உள்பட பல்வேறு இடங்களில் காற்றுத் தரம் மிதமான பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு
தில்லியில் வியாழக்கிழமை (செப். 19) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.