முகப்பு
புதுதில்லி

விகாஸ்புரி பகுதியில் உள்ள விருந்து மண்டபத்தில் தீ விபத்து

தில்லியின் விகாஸ்புரி பகுதியில் உள்ள ஒரு விருந்து மண்டபத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 18 ஏப்ரல், 2025 at 7:07 PM
கோப்புப் படம்
பகிர்:

தில்லியின் விகாஸ்புரி பகுதியில் உள்ள ஒரு விருந்து மண்டபத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 13 தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைக்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அவா் கூறினாா். அவா் மேலும் கூறுகையில், ‘விகாஸ்புரி பகுதியில் உள்ள எச் பிளாக்கில் உள்ள விருந்து மண்டபத்தின் கூடாரத்தில் தீ பற்றியதாக வெள்ளிக்கிழமை மாலை 4.11 மணிக்கு அழைப்பு வந்தது. நாங்கள் மொத்தம் 13 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனா்‘ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →