FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆடி அமாவாசை: சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி 

ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல ஆகஸ்ட் 8 முதல் வரும் 14-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல ஆகஸ்ட் 8 முதல் வரும் 14-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பெரும் விமரிசையாக நடத்தப்படுகிறது. அதன்படி இந்தாண்டு ஆடி அமாவாசைக்கு நேற்று முதல் மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மலைக் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஜெனரேட்டர்கள் மூலம் தேவையான மின்விளக்குகள் மற்றும் சூரியசக்தி மின்விளக்குகள், குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், வயதான பக்தர்களுக்காக டோலி வசதியும், அவசர மருத்துவ சிகிச்சை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

பக்தர்கள் காலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments