செய்திகள்

பரம்பொருளால் சுக்கிர யோகம் பெற்றவர்கள் இவர்கள்!

DIN

சுக்கிரன் என்றால் அத்தி, அந்த மரத்தில் செய்யப்பட்ட பெருமாளை வழிபட்டால் கேட்ட வரங்களை அள்ளித்தருபவர் என்று அனைவருக்கும் தெரியும். காஞ்சியில் குடிகொண்டிருக்கும் அத்திவரதரை கூட்டத்தில் தான் சென்று தரிசிக்க வேண்டும் என்றல்ல. நீராக, ஆகாயமாக, கற்பூர தீபமாக, காற்றாக எங்கும் இருக்கும் பரம்பொருள் விஷ்ணுவாக எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருந்து அருள்பாலிக்கிறார்.

அத்தி மரத்தில் செய்து வழிபட்ட பெருமாள் கேட்ட வரங்களை பொருள்களை தரக்கூடியவர் என்பது உண்மை. அத்தி வரதரைப் போல அத்தி மர பட்டையும், கனியும், காயும், பூவும், மரத்தண்டுகளிலும் வைத்திய மூலிகையாக பயன்பெறுகிறது. அதுதவிர சுகபோகம் கொடுக்க கூடிய சுக்கிரன் அத்தி மரமாக மறுபிறவி எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. அத்தியை பற்றி சூட்சம விவரங்கள் என் ஆன்மீக ஜோதிட பிரிவில் விளக்கியுள்ளேன். 

சுக்கிரன் என்றவுடன் அத்தி 6-வது கிரகமான சுக்கிரனின் அம்சமாகக் கூறப்படுகிறது. உடலுக்கும், உணவிற்கும், பொருளும் எவ்வாறெல்லாம் சுக்கிர பகவான் உதவுகிறார் என்று பார்ப்போம். அத்தியால் உணவின் மூலமாக உடலில் ஏற்படும் இரும்பு, புரோட்டீன், குளூக்கோஸ், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் ஏ, சி குறைபாடு  உள்ளவர்களுக்கு மற்றும் வாய்ப்புண், ஈறுகளில் சீழ் வடிதல், உடலில் ரத்தம், வெளியேறுதல், உடல் பலவீனம் அடைந்தவர்கள் இந்த அத்தியானது அதிகம் பயன்பாடுகள் மிக்கது. சீமை அத்திப்பழம் புதனால் ஏற்படும் வெண்புள்ளிகள், தோல் வியாதி, வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது.  

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் முக்கிய ஸ்தலம் என்றும் அந்த குளமானது சுக்கிரனின் பலம் கொண்ட அத்திவரதர் என்றும் நிறையபேர் செய்திகள் மற்றும் புத்தகத்தில் வாயிலாகக் குறிப்பிட்டாலும், இந்த வருட காலத்தில் காஞ்சிபுரம், தமிழ்நாடு தவிர அனைத்து நாட்டு மக்களும் ஒருங்கிணைத்து அந்த பெருமாளின் அழகான சூட்சம ரகசியங்கள் ஒரு மண்டலத்தில் (48 நாட்களில்) உலகெங்கும் தெரிவிக்கப்பட்டது.    

நம் பெரியவா அருள்பாலிக்கும் இந்த காஞ்சியில் அங்குள்ள அனைத்து மக்களுக்கும் அத்திவாரதரால் ஒருவித பெருமை கொண்டனர். அத்திவாரதரால் யார் யார் பெருமை பெற்றனர் என்று பார்ப்போம். இந்த கண்கொள்ளாக் காட்சிதனை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் காஞ்சியை நோக்கி படையெடுத்த காலகட்டத்தில் எத்தனை பேருக்கு உயர்வூட்டினார் நம் சுக்கிர பகவான் என்று பார்ப்போம்.

எங்கள் குடும்பத்தோடு காஞ்சியில் அத்திவரதை தரிசிக்க ரயிலில் வந்தோம் அங்கே ஒரு ஆட்டோ ஓட்டுநர் கோவிலுக்குச் சென்றுவிட என்னிடம் ரூ.200 கேட்டார். நான் கேட்டேன் அய்யா சிறிது தூரத்திற்கு இவ்வளவு கேட்கிறீர்களே என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில் "இவ்வளவு நாள் ஆட்டோ ஓட்டியும் ஒரு ரூபாய்க்கும் பிரயோஜனம் இல்லாமல் என் குடும்பத்தாரோடு பசியுடனும் பட்டினியுடனும் சாகும் நிலையில் என் வாழ்க்கை இருந்தது. ஆனால் அத்தி வரதர் உறுதுணையோடு எனக்கு வேண்டியதை இந்த ஆட்டோ மூலம் சம்பாதி வருகிறேன். 

நான் இந்த கூட்டத்தில் எப்படியாவது கஷ்ட்டபட்டு உங்களை என்னால் முடிந்தவரை அத்திவரதர் கோவிலுக்கு அருகிலே விட்டு விடுகிறேன். நீங்கள் கொடுக்கும் பணம் போதுமானதாக இருந்தால் கொடுக்கவும் இல்லையென்றால் உங்கள் விருப்பம்" என்று கூறினார். அன்று அவருக்கு அத்தி வரதர் வயிறார உணவு கொடுக்கும் குருசாமியாகத் தெரிந்தது. அவர் அத்தி வரதரின் மேல் வைத்த நம்பிக்கைக்காக அவரிடம் 250 ரூபாய் கொடுத்துவிட்டுச் சென்றேன்.

இதே மாதிரி சுக்கிர யோக திசை அன்றைய தினம் பயன்பெற்றவர்கள் அங்குள்ள துணி வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள், லேமினேட் படம் விற்பவர்கள், தங்கும் விடுதிகள் வைத்திருப்பவர்கள், சிற்றுண்டி மற்றும் குளிர்பான கடைக்காரர்கள். அதுதவிர அன்றைய காலகட்டத்தில் அவரால் மேன்பட்டவர்கள் துணி  வியாபாரிகள், youtube  சேனல்   நடத்துபவர்கள், சிறு பத்திரிகைத் துறையினர் என்று அனைத்து மக்களுக்கும் வாழ்வாதாரத்துக்கு வித்திட்டவர் நம் பரம்பொருள். முக்கியமாக பக்தர்களின் வாயிலாக உண்டியல் மூலம் மற்றும் ஆன்லைன் டிக்கெட் கட்டணம் வழியாக அதிக காணிக்கைகள்  கிடைத்திருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்திவரதர் வைபவம் நினைவாக காஞ்சிபுரம்  மாவட்டத்தில் 40 ஆயிரம் அத்தி மரக்கன்றுகள் நடப்பட்டன. அதனால் காஞ்சியில் அத்தியின் வாசம் அதிகம் பெரும்.

அத்திகிரியில் 2019 ஆகஸ்ட் 17ம் தேதி அத்தி வரதர் பூஜை வைபவத்திற்குப் பின் அனந்தசரஸ் குளத்தில் வைத்தபிறகும் சிலருக்கு இன்றும் சுக்கிர யோகம் பெற்றுள்ளனர். அவர்கள் யார் என்று பார்ப்போம். பட்டுத்தறி நெசவாளியின் திறமையை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் வகையில் அத்தி வரதர் உருவத்தை தத்ரூபமாக புடவை, வேஷ்டி மற்றும் பாவாடை என்று பல்வேறு வடிவமைப்பில் நெய்யப்பட்ட தொழிலாளிகள் என்று பல்வேறு மக்கள் சுக்கிர யோகம் பெற்றனர். 
 
அடுத்து சுக்கிரன் பார்வையானது பொம்மை வியாபாரிகள் மேல் விழுந்தது. இந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் எல்லா வீடுகளிலும் சுக்கிரனான அத்திவரதர் கொலுவாக வீற்றிருந்தார். அத்தி வரதர் பொம்மைகள் கடலூர், விளாச்சேரி, திருப்பரங்குன்றம், மதுரை, கடலுார், புதுச்சேரி, கும்பகோணம் உள்ளிட்ட பல பகுதிகளில் அழகாக தயாரிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு விற்கப்பட்டது. ஆனால் அநேக கொலு வைப்பவர்களுக்கு இந்த அத்தி வரதர்  கிடைக்காமல் நிறையப் பேர் தவித்துப் போய்விட்டனர்.

ஒருசில வீடுகளில் அத்தி வரதர் பொம்மை கிடைக்காததால் காகித அட்டையில் உருவம் அச்சிட்டிடப்பட்டு அதில் வண்ணங்கள் பூசி கொலுவில் வைக்கப்பட்டனர். ஒரு வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் கீழே உள்ளது.

அத்திவரதர் உருவம் பொறித்த டாலர் மற்றும் உலோக பொம்மைகள் செய்யும் மக்கள் மீதும் சுக்கிரன் அருள் பாலித்திருக்கிறார். இத்துடன் சுக்கிரன் ஆசீர்வாதம் பெற 40 வருடம் கழித்து 2059 காத்திருக்க வேண்டும். ஆனால் அவரை மறக்க முடியாத அளவு நம்முள் இருக்கிறார் நம் பரமன். ஆனால் 40 வருடம் காத்திருக்காமல், நமக்கு ஆசீர்வாதம் கொடுக்கும் அத்தி கோவில்களான உடுப்பி கிருஷ்ணன், புதுவைசெங்கேணி அம்மன், கோழிகுத்தி வானமுட்டிப் பெருமாள், அத்தி மரம் தலவிருட்சமாகக் கொண்ட கோவில்களை வணங்குவோம். சுக்கிர யோகம் பெற - அத்தி மரத்தடியில் அமர்ந்து இந்த மந்திரம் ஜெபித்து, பூக்களால் அர்ச்சனை செய்தால், பொன்னும் பொருளும் அருளும் 
தருவார் நம் பரம் பொருள்.

"ஓம் அச்வ த்வஜாய வித்மஹே

தனுர் ஹஸ்தாய தீமஹி

தன்னோ சுக்ர பிரசோதயாத்"

குருவே சரணம்!

- ஜோதிட சிரோன்மணி தேவி

Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்பீட்டு சலுகைகள்!

3-ஆவது முறையாக விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ - மாணவியா் ஆா்வம்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

இந்தியன் வங்கி நிகர லாபம் 55% அதிகரிப்பு

SCROLL FOR NEXT