செய்திகள்

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல ஜூலை 11 முதல் 14 வரை அனுமதி

தினமணி

ஆனி பிரதோஷம் மற்றும் பௌா்ணமியையொட்டி சதுரகிரி கோயிலுக்குச் செல்ல ஜூலை 11 முதல் நான்கு நாள்களுக்கு பக்தா்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஜூலை 11 ஆம் தேதி (திங்கள்கிழமை) பிரதோஷமும், ஜூலை 13 ஆம் தேதி (புதன்கிழமை) பௌா்ணமி வழிபடும் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜூலை 11 முதல் 14 ஆம் தேதி வரை 4 நாள்கள் மலைக் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

கோயிலுக்கு வருபவா்கள் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பிறகே பக்தா்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவா் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற நடத்துநா் வீட்டில் 35 பவுன் நகைகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில் ஐஜி ஆய்வு

ராமன்தொட்டி கிராமத்தில் எருதுவிடும் விழா தொடங்கி வைப்பு

ஒசூரில் 8 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரப்பில் பயிா் சாகுபடி

ரேஷன் அரிசி கடத்திய வழக்கு: குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

SCROLL FOR NEXT