சபரிமலை மண்டல பூஜை வருவாய் ரூ. 332 கோடியைக் கடந்தது! கடந்த ஆண்டைவிட அதிகம்!
சபரிமலை மண்டல பூஜை வருவாய் ரூ. 332 கோடியைக் கடந்தது!
சபரிமலை மண்டல பூஜை வருவாய் ரூ. 332 கோடியைக் கடந்தது :
பத்தனம்திட்டா : சபரிமலை மண்டல பூஜை காலத்தில் வருவாய் ரூ. 332 கோடியைக் கடந்தது. நிகழாண்டு மண்டல பூஜையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மற்றும் இதர வருவாய் மூலம் சபரிமலை தேவஸ்தானத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை(டிச. 27) மாலை நிலவரப்படி, ரூ. 332.77 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, கடந்தாண்டு மண்டல பூஜை காலத்தில் பெறப்பட்ட வருவாய் ரூ. 297.06 கோடியைவிட ரூ. 35 லட்சத்துக்கும் மேல் கூடுதலாகும். 2025-ஆம் ஆண்டு மண்டல பூஜை காலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் எண்ணிக்கை 30.56 லட்சத்தைக் கடந்திருப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்தான வாரிய (டிடிபி) தலைவர் கே. ஜெயகுமார் தெரிவித்தார்.
முன்னதாக, சுவாமி ஐயப்பனுக்கு வெள்ளிக்கிழமை புனிதமான தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. சபரிமலையில் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை சனிக்கிழமை (டிச.27) நடைபெற்ற பின், அதனைத்தொடர்ந்து, இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மகர விளக்கு பூஜைக்காக டிச. 30-இல் திருநடை திறக்கப்பட உள்ளது.
Advertisement
Advertisement
A total of 30.56 lakh devotees have visited the famed Lord Ayyappa temple here so far during the Mandala Pooja season, generating a revenue of Rs 332.77 crore in the period, Travancore Devaswom Board (TDB) president K Jayakumar said on Saturday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.