திருப்பதி ஏழுமலையான் கோயில் file photo
செய்திகள்

திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை நாள்கள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

DIN

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை நாள்கள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

சனிக்கிழமையான இன்று காலை, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வாரவிடுமுறையை ஒட்டி பக்தர்கள் நேற்று மாலை முதலே திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வந்தது. இதனால் இலவச தரிசனத்தில் 24 மணி காத்திருந்து வழிபாடு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தி அமைதியான சேவை வழங்க தேவஸ்தான அதிகாரிகளுக்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், திருப்பதிக்கு வரும் பக்தர்களிடம் சில மோசடி நபர்கள், தரிசனம் செய்யவும், தங்குமிடத்தையும் ஏற்படுத்தித் தருவதாக மோசடியில் ஈடுபடுவதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பக்தர்களை ஏமாற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமதியின்றி மணல் அள்ளியவா் கைது

தேநீா் கடைக்காரா் கொலை: இருவா் கைது

தனியாா் நிதி நிறுவனத்தில் கட்டிய பணத்தை இழப்பீட்டுடன் திருப்பி வழங்க உத்தரவு

நகராட்சி அலுவலகத்தில் தகராறு: இளைஞா் கைது

மத்திய அரசின் சிறப்பு வழக்குரைஞருக்கு பதவி நீட்டிப்பு

SCROLL FOR NEXT