விளையாட்டு

காமன்வெல்த் போட்டி: இந்திய மகளிர் அபார வெற்றி (ஹைலைட்ஸ் விடியோ) 

DIN

காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மகளிருக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய மகளிரணி அபார வெற்றி பெற்றது. 

மழையால் ஆட்டம் 18 ஓவர்களுக்கு மாற்றப்பட்டது. முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 99 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிச்தான் சார்பில் முனீப் அலி மட்டும் 32 ரன்களை எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

அடுத்து ஆடிய இந்திய மகளிர் அணி 11.4 ஓவர்களில் 1012 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்மிருதி மந்தனா 63 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடினார். 

முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் இப்போடியில் இந்தியா சிறப்பாக விளையாடியது. அடுத்த போட்டி ஆகஸ்ட் 3 ஆம் தேதி பார்படோஸ் அணியுடன் விளையாடும். இப்போட்டியில் இந்திய அணி வென்றால், அரை இறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT