கோப்புப் படம் 
விளையாட்டு

இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய பி.வி. சிந்து

சிங்கப்பூரில் நடைப்பெற்று வரும் ஒபன் பாட்மின்டன் போட்டியில் அரையிறுதியில் வெற்றிப்பெற்று இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீரர் பி.வி. சிந்து. 

DIN

சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் ஓபன் பாட்மின்டன் போட்டியில் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து. 

கடந்த மே மாதத்துக்குப் பிறகு முதல்முறையாக ஒரு போட்டியின் அரையிறுதிக்கு பி.வி. சிந்து முன்னேறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரையிறுதியில் சிந்து, ஜப்பான் வீராங்கனை சேனா கவாகமியை எதிா்கொண்டு விளையாடினார். தொடக்கம் முதலே சிந்து ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் 21-15, 21-7 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தேர்வாகியுள்ளார். 

இதுவரை சேனாவை மூன்று முறை சந்தித்திருக்கும் சிந்து மூன்றிலுமே வென்றிருக்கிறாா் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

கூலி டிரெய்லர்!

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

SCROLL FOR NEXT