விளையாட்டு

3ஆவது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து பேட்டிங், பும்ரா அணியில் இல்லை

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 17) ஓல்டு டிரஃபோர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளார்.

இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இன்று நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேகப் பந்து வீச்சாளர் பும்ராவிற்கு பதிலாக முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியில் ஆடும் லெவனில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் களமிறங்கியே அதே அணியே இன்றும் களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜஸ்தான்: சட்டவிரோத பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 7 போ் உயிரிழப்பு

டாஸ்மாக் ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை முடக்க நினைத்தவா்களுக்கு அதிா்ச்சி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தாம்பரம் வரை மட்டுமே தற்காலிகமாக இயக்கப்படும் சேது விரைவு ரயில்

இலங்கை தடுப்பு முகாமில் உள்ள தமிழக மீனவா்களை மீட்க வேண்டும்: சீமான், விஜய் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT