விளையாட்டு

டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை ஆஸ்திரேலியா வெல்லும் : ரிக்கி பாண்டிங் 

DIN

இந்த வருட டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வெல்லும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மற்றும் ஆஸ்திரேலியாவின் சிறந்த கேப்டனுமான ரிக்கி பாண்டிங் இந்த வருட டி20 உலக கோப்பை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: 

கடைசி டி20 கோப்பையினை வென்ற ஆஸ்திரேலியாவிற்கு அதே நாட்டில் இம்முறை நடப்பதால் சாதகமான சூழ்நிலை நிலவும். ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடுகளம் பற்றி எனக்கு தெரியும். கடினமான அந்த ஆடுகளத்திலும் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடினர்.

தற்போது இங்கிலாந்து அணி வெள்ளைப் பந்து போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது. எனக்கு தெரிந்து 3 அணிகளுக்கு பெரிய அளவிலான போட்டி இருக்கும். இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளின் போட்டி கடுமையானதாக இருக்கும். ஏனெனின் அதிகமான ஆட்ட நாயகர்கள் இந்த அணிகளில்தான் இருக்கிறார்கள். 

நியூசிலாந்து, பாகிஸ்தான் அல்லது மே.இ.தீவுகள் அணிகள் கூட நன்றாக விளையாடுகின்றனர். அவர்களுக்கு டி20 சாதகமான களம். இருப்பினும் அவர்கள் ஆட்டத்தை எப்படி ஆடுவார்கள் என்பதைப் பொறுத்தே இந்த உலக கோப்பை முடிவுகள் இருக்கும்.

என்னைப் பொருத்தவரை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு தேர்வாகும். அதில் ஆரோன் பின்ச் தலைமையிலான அணி ரோகித் சர்மா அணியினை வென்று கோப்பையை வெல்லும் என நினைக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT