படம் | ஐசிசி 
விளையாட்டு

யு-19 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் பேசியது என்ன?

இறுதிப்போட்டியில் எங்களது திட்டங்களை சரியாக நிறைவேற்ற முடியவில்லை என 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டன் உதய் சஹாரன் தெரிவித்துள்ளார்.

DIN

இறுதிப்போட்டியில் எங்களது திட்டங்களை சரியாக நிறைவேற்ற முடியவில்லை என 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டன் உதய் சஹாரன் தெரிவித்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டி நேற்று (பிப்ரவரி 11) நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கான காரணம் குறித்து இந்திய அணியின் உதய் சஹாரன் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் சில தவறான ஷாட்டுகளை விளையாடினோம். எங்களால் நீண்ட நேரம் களத்தில் நிலைத்து நிற்க முடியவில்லை. நாங்கள் இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என சிறப்பாக எங்களை தயார் செய்திருந்தோம். ஆனால், எங்களால் அந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. இந்த உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் சிறப்பானதாக அமைந்தது. இந்திய அணி வீரர்கள் உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT