ஜடேஜா, அஸ்வின்.  படம்: இன்ஸ்டா / ஜடேஜா.
கிரிக்கெட்

அஸ்வினை அண்ணா என்றழைத்த ஜடேஜா!

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த அஸ்வினை அண்ணா எனக் கூறி பதிவிட்டுள்ளார் ஜடேஜா.

DIN

இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா அஸ்வினை அண்ணா என்று பதிவிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஸ்வின் ஜடேஜா இருவரும் இந்தியாவுக்கும் சரி சிஎஸ்கே அணிக்கும் முக்கியமான வீரர்கள். சகோதரர்கள் போலவே பல வருடங்கள் ஒன்றாக இணைந்து விளையாடியுள்ளார்கள்.

இந்தியாவின் பௌலிங் ஆல்-ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் (38), சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (டிச.18) அறிவித்தாா்.

பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணியிலிருக்கும் அவா், கிரிக்கெட் உலகமும், ரசிகா்களும் எதிா்பாராத இந்த முடிவை, தொடரின் இடையே அறிவித்திருக்கிறாா். ஐபிஎல் உள்ளிட்ட லீக் போட்டிகளில் அவா் தொடா்ந்து விளையாடவுள்ளாா்.

தனது இன்ஸ்டா பக்கத்தில் ரவிந்திர ஜடேஜா ஸ்டோரில் கூறியதாவது:

உங்களுடன் இத்தனை ஆண்டுகள் ஓய்வறையை பகிர்ந்துகொண்டது தனிச்சலுகையாக கருதுகிறேன்.

அண்ணா ஃபார் ஏ ரீசன் என்ற ஹேஷ்டேக்கையும் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணிக்காகவும் சிஎஸ்கே அணிக்காகவும் அஸ்வின் - ஜடேஜா ஒன்றாக விளையாடியுள்ளார்கள். மீண்டும் அஸ்வின் 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்காக விளையாடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT