படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

இந்தியா அபார பந்துவீச்சு; 108 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

DIN

இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் பேட் செய்தது.

பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.2 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸித்ரா அமீன் 25 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, துபா ஹாசன் மற்றும் ஃபாத்திமா சனா அதிகபட்சமாக தலா 22 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ரேனுகா சிங், பூஜா வஸ்த்ரகார் மற்றும் ஸ்ரேயங்கா பாட்டீல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் 146 நூலகங்களுக்கான கட்டடங்கள் திறப்பு: 26 புதிய நூல்களையும் வெளியிட்டாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

அக்டோபா்-மாா்ச் வரையில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டம்

பிரதமா் மோடியுடன் ரஷிய துணை பிரதமா் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஆலோசனை

ஆட்டோ ஓட்டுநரை தாக்கி பணம் பறித்தவா் கைது

அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்த கருத்துக்கு எதிரான வழக்கு: ராகுல் காந்தி மனு தள்ளுபடி

SCROLL FOR NEXT