கே.எல்.ராகுல் - ஜெய்ஸ்வால் கூட்டணி.  படம்: ஏபி.
கிரிக்கெட்

அசுர பலத்தில் இந்தியா..! 2ஆம் நாள் முடிவில் 218 ரன்கள் முன்னிலை!

ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆவது நாளில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 218 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

DIN

இந்தியா ஆஸி.க்கு இடையேயான முதல் டெஸ்ட் பெர்த்தில் நேற்று (நவ.22) தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150க்கு ஆல் அவுட் ஆக, ஆஸி. 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தற்போது, இந்திய அணி 2ஆம் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் 2ஆம் நாளை முடித்துள்ளது.

ஜெய்ஸ்வால் 90 ரன்கள் (193 பந்துகளில்) கே.எல்.ராகுல் 62 ரன்கள் (153 பந்துகளில்) எடுத்து அசத்தியுள்ளார்கள்.

ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் பல சாதனைகளை முறியடித்துவருகிறார்கள். பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய பந்துவீச்சினால் இந்திய அணியின் தொடக்க வீரர்களை எதுவும் செய்யமுடியவில்லை.

மொத்தமாக இந்திய அணி 2ஆம் இன்னிங்ஸில் 218 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

முதல் இன்னிஸில் 150க்கு ஆல் அவுட்டான இந்திய அணியா இது என்பதுபோல் விளையாடியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சவரனுக்கு ரூ.800 குறைந்த தங்கம் விலை!

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

ஜல்லிக்கட்டு வா்ணனையாளா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிக்கை

10, 12 வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு! முழு விவரம்!

எனது தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை! தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT