சைம் அயூப் 
கிரிக்கெட்

53 பந்துகளில் சைம் அயூப் அதிரடி சதம்! தொடரை சமன் செய்தது பாக்!

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்தது பாகிஸ்தான் அணி.

DIN

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்தது பாகிஸ்தான் அணி.

ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ஜிம்பாப்வேயின் புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் கிரெக் எர்வின் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

சோகமாக இருக்கிறது, மீண்டும் ஒன்றிணைவோம்; ரிஷப் பந்த் குறித்து தில்லி கேபிடல்ஸ் உரிமையாளர்!

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 32.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டியோன் மையர்ஸ் 33 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளையும், அலி ஆஹா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை ஜிம்பாப்வே வீரர்களால் வீழ்த்த முடியவில்லை.

ஓப்பனிங்கில் அசத்தும் கே.எல்.ராகுல்! தனது இடத்தை விட்டுக்கொடுப்பாரா ரோஹித் சர்மா?

அதிரடியாக விளையாடிய சைம் அயூப் 52 பந்துகளில் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். அப்துல்லா சாபிக் 48 பந்துகளில் 32 ரன்களும், சைம் அயூப் 113 ரன்களும்(17 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்தனர்.

18.2 ஓவர்களில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 148 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இவ்விரு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி வருகிற நவம்பர் 28 ஆம் தேதி புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

திருப்தியான ஏலம்: 6ஆவது கோப்பையை வெல்வோம்..! ஆகாஷ் அம்பானி நம்பிக்கை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்தவாசியில் ரக்சா பந்தன் விழா

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

திருச்சி மாநகரில் பலத்த மழை

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

SCROLL FOR NEXT