உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி  படம் | ஐசிசி
கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: போட்டி நடைபெறும் இடம், தேதி அறிவிப்பு!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் இடம் மற்றும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் இடம் மற்றும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி முதல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐசிசி தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூன்றாவது எடிசன் லார்ட்ஸ் மைதானத்தில் அடுத்த ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி முதல் நடத்தப்படவுள்ளது. போட்டி ஜூன் 11 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெறும். தேவைப்பட்டால், ரிசர்வ் நாளான ஜூன் 16 ஆம் தேதி பயன்படுத்திக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக லார்ட்ஸில்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முதல் முறையாக லார்ட்ஸ் மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. முதல் முறையாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சௌத்தாம்டனிலும், இரண்டாவது முறை ஓவலிலும் நடத்தப்பட்டது. இரண்டு முறையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய அணி, முதல் முறை நியூசிலாந்திடமும் இரண்டாவது முறை ஆஸ்திரேலியாவிடமும் தோல்வியடைந்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் தங்களுக்குள் மோதிக்கொள்ள உள்ளன. தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

தரவரிசையில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் போன்ற அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

SCROLL FOR NEXT