தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ராப் வால்டர் படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்; காரணம் என்ன?

தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ராப் வால்டர் விலகியுள்ளார்.

DIN

தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ராப் வால்டர் விலகியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான தலைமைப் பயிற்சியாளராக ராப் வால்டர் செயல்பட்டு வந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் முதல் தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளாராக செயல்பட்டு வந்த அவர், தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த பொறுப்பிலிருந்து விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திடம் ராப் வால்டர் தெரிவித்த நிலையில், அதனை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவது குறித்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கையின் வாயிலாக ராப் வால்டர் தெரிவித்ததாவது: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டதை மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன். தென்னாப்பிரிக்க அணியுடன் இணைந்து செய்துள்ள சாதனைகளை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

எனது இந்த பயணத்தில் தென்னாப்பிரிக்க அணியின் வீரர்கள், பணியாளர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியம் என அனைவரும் மிகுந்த ஒத்துழைப்பு அளித்தார்கள். நான் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதற்கான நேரம் வந்துவிட்டது. தென்னாப்பிரிக்க அணி தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அணியின் அடுத்த பயிற்சியாளரை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவிக்கும் எனத் தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்க அணியுடன் ராப் வால்டர்...

ராப் வால்டரின் பதவிக்காலத்தில் தென்னாப்பிரிக்க அணி பல்வேறு உயரங்களை அடைந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டி வரை தென்னாப்பிரிக்கா முன்னேறியது. கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. இறுதிப்போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியடைந்தது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரே ராப் வால்டர் தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட கடைசி கிரிக்கெட் தொடர். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை மேலும் உயர்ந்தது! இன்று எவ்வளவு?

கரூர் நெரிசல் சம்பவம்: வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் கைது!

கரூர் மாவட்டச் செயலாளரிடம் 10 மணி நேரமாக விசாரணை!

கரூர் நெரிசல் பலி சம்பவம்: மற்றொரு தவெக நிர்வாகி கைது!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

SCROLL FOR NEXT