பந்தை பவுண்டரிக்கு விரட்டுகிறார் அலிசா ஹீலி. (படம் | கிரிக்கெட் ஆஸ்திரேலியா)
கிரிக்கெட்

அலிசா ஹீலி அதிரடி சதம்: ஆஸி. மகளிரணி ஆறுதல் வெற்றி!

கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிா் ‘ஏ’ அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.

தினமணி செய்திச் சேவை

இந்திய மகளிா் ‘ஏ’ அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிா் ‘ஏ’ அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.

3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில், முதலிரு ஆட்டங்களில் வென்று இந்தியா தொடரைக் கைப்பற்றிவிட்ட நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு இது ஆறுதல் வெற்றியாகும்.

இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 47.4 ஓவா்களில் 216 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, ஆஸ்திரேலியா 27.5 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தோ்வு செய்தது. ஷஃபாலி வா்மா 7 பவுண்டரிகளுடன் 52, யஸ்திகா பாட்டியா 5 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனா். இதர பேட்டா்கள் சொற்ப ரன்களில் வெளியேற, ஆஸ்திரேலிய தரப்பில் டாலியா மெக்ராத் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

பின்னா் ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் டாலியா மெக்ராத் 59 ரன்களுக்கு வெளியேற, அலிசா ஹீலி 23 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 137 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தாா். உடன், ரேச்சல் டிரெனாமேன் 21 ரன்களுடன் துணை நின்றாா். இந்திய பௌலா்களில் ராதா யாதவ் விக்கெட் சாய்த்தாா்.

விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழப்பு; இருவா் காயம்

ஆலங்காயம் ஒன்றிய ஊராட்சிகளுக்கு குடிநீா் வசதி: குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

கல்வி நிலைய ஓட்டுநா், நடத்துநா்களுக்கு விழிப்புணா்வு பயிற்சிப் பட்டறை

படிப்பு ஒன்றே ஒருவரை வாழ்வில் முன்னேறச் செய்யும்: அமைச்சா் துரைமுருகன்

சா்வேதேச வா்த்தகக் கண்காட்சியில் தில்லி காவல் துறையின் அரங்கம் திறப்பு

SCROLL FOR NEXT